Tree Of Life

Image of the Week
Image of the Week

வாழ்க்கை மரம் போன்றது

- ஏக்நாத் ஈஸ்வரன்

“மரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவன், காட்டைக் கோட்டை விட்டான்” என்ற பழமொழியை நாம் கேட்டு இருக்கலாம். அதே போல் நம்மில் பலர், இலைகளைப் மட்டும் பார்த்துக் கொண்டு, மரத்தைக் காண்பதில்லை, என்றும் கூட சொல்லலாம். பல்லாயிரம் . இலைகளின் கூட்டத்தில் ஆழ்ந்து போவதால்,, மரம் என்று ஒன்று இருப்பதையே நாம் மறக்கிறோம்.

மரம் இல்லாமல் இலை இல்லை என்பது நமக்கு புரிவதில்லை. மரத்தின் உயிர் திரவம்தான் இலைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் நவீன வாழ்வில் இலை போன்ற தனித்துவத்திற்கே முதலிடம் கொடுக்கப் படுகிறது. “உன்னுடைய சந்தோஷத்தையும், பூரணத்துவத்தையும், உனக்கே உரித்தான, தனி வழியில் தேடு” என்ற செய்தி, தினம் நம்மை பல வகைகளில் வந்து அடைகிறது. நாம் தனித்துவத்தில் திருப்தியை நாடி, ஓடுவதற்கு காரணம், மரமே இல்லாமல் இலை மட்டும் செழிக்க முடியும் என்ற தவறான புரிதலே,

கேள்வி:
நாம் பலருடன் சார்ந்து வாழ்கிறோம் என்று உணர்ந்த ஒரு தருணத்தை பகிர்ந்து கொள்ளூங்கள்.
Moved by this reading? Join a live Awakin Circle to discuss in community.
Join this week
More ways to connect

Add Your Reflection